Friday, March 9, 2012

ராகுல் திராவிட் :திரும்பிப்பார்க்கின்றேன்

ஊடகவியலாளராக இருந்து தற்போதைய பணியில் இணைந்துகொண்ட பின்னர் நீண்டநாட்களாக எனது தளத்தில் ஆக்கங்களை பதிவுசெய்யமுடியவில்லையே என்ற எண்ணம் நீண்டநாள்களாக இருந்துகொண்டிருந்தது. ஏனைய பலரைப்போன்றே இவ்வருடம் முதல் மீண்டும் எழுதவேண்டும் என திடசங்கற்பம் பூண்டு ஜனவரி முதலாம் திகதியன்று அடையாளமாக ஒருவரியைப் பதிவுசெய்தேன். ஆனால் காலம் ஓடுகிற ஓட்டத்தில் மூன்றுமாதங்களின் பின்னரே முழுமையாக பதிவொன்றை எழுதமுடிந்துள்ளது.

பதிவை எழுதுவதற்கு ஊந்துசக்தி அன்றேல் உற்சாகம் அவசியம் அந்த ஊந்துசக்தியாக அமைந்தது இன்றையதினத்தில் அதிகமாக பேசப்பட்ட ஒரு செய்தி. ஆம் இந்திய அணியின் நட்சத்திரத்துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான ராகுல் திராவிட்டின் பிரியாவிடை அறிவிப்புச் செய்தியே அதுவாகும்.

எப்பேர்ப்பட்ட ஒருவீரர்: மகத்தான வீரர் என்ற மகுடத்திற்கு சொந்தம் கொண்டாடக்கூடிய ஒருசிலரில் டிராவிட்டும் ஒருவர். 1996ம் ஆண்டுகளில் நான் காபொத உயர்தரப்பரீட்சைக்கான வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஸ்போட்ஸ் ஸ்ரார் சஞ்சீகை வாசிக்கும் பழக்கம் அபரீதமாக இருந்தது. அந்தாண்டில் வெளியான ஒரு சஞ்சீகையில் நான்கு இந்திய வீரர்களின் படங்களைப் போட்டு இருந்தார்கள். அதில் மீசை (தாடியும் இருந்தததா?)யுடன் ஒரு வீரர் ராகுல் திராவிட் என்ற பெயரில் பார்த்த ஞாபகம் இன்றும் நினைவில் உள்ளது. இங்கிலாந்து சுற்றுலாவிற்காக தெரிவுசெய்யப்பட்ட நான்கு புதுமுகவீரர்களில் திராவிட் மட்டுமே இத்தனை தூரம் பயணித்து மகத்தான சாதனை படைத்திருக்கின்றார் என நினைக்கையிலே உள்ளம் மகிழ்கின்றது. ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை மும்பை அணிக்காக விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் சய்ராஜ் பகத்துலே மற்றும் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் விக்ரம் ரதோர் ஆகியோரின் பெயர்கள் நினைவில் வருகின்றபோதும் மற்றவரின் பெயரை நினைவில் கொள்ள முடியவில்லை.

ராகுல் திராவிட் பற்றி எழுதுவதென்றால் புத்தகம் புத்தகமாக எழுதமுடியும். அவரது சாதனைகளைப்பற்றிப் பேசவென்றும் அவரது அர்ப்பணிப்பு தியாகம் ஒழுக்கம் பற்றிப்பேசவென்றும் பல புத்தகங்களை எழுதிவிடமுடியும்.

இதனைப் பலரும் தற்போது பட்டியலிட்டு எழுதிக்கொண்டிருப்பார்கள். ராகுல் திராவிட்டிடம் இருந்து எனக்குப்பிடித்தவிடயம் யாதென்றால் சாதனைகளுக்காகவும் பணத்திற்காகவும் புகழுக்காகவும் விளையாடிய வீரர்கள் மத்தியில் கிரிக்கட்மீதான விருப்பிற்காக விளையாட்டிற்குரிய உன்னத நாமத்திற்காக விளையாடிய ஆர்ப்பாட்டமில்லாத வீரர் என்று ராகுல் திராவிட்டைக் கூறிவிடலாம்

Sunday, January 1, 2012

2012 New Year

புது வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

Friday, February 18, 2011


 Row;ge;JtPr;rhsh;fspd; fuq;fspy; cyff;fpz;zk; ?



mUz; MNuhf;fpaehjh;

;,e;jpah kw;Wk; mT];jpNuypa mzpfSf;fpilNa fle;j Qhap;w;Wf;fpoik ,;lk;ngw;w cyff;fpz;z gapw;rpg; Nghl;bia mtjhdpj;j NghJ ,;k;Kiw cyff;fpz;zj;jpy; Row;ge;JtPr;rhsh;fs; Kf;fpa ghj;jpuj;ij tfpg;gjw;fhd rhj;jpaf;$Wfs; ,Ug;gij czh;e;Jnfhs;sKbe;jJ

gapw;rpg;Nghl;bapy; ,;e;jpah ngw;w 214 Xl;lq;fSf;F RUz;lijaLj;J mT];jpNuypahtpw;F ntw;wp epr;rak; mjid vj;jid Xth;fspy; ngWtnjd;gNj Nfs;tpahf ,;Ue;j epiyapy; eilngw;wNjh jiyfPohdJ xUfl;lj;jpy; xUtpf;fl;bog;gpw;F 118 Xl;lq;fis ngw;wpUe;j mT];jpNuypa mzp Row;ge;JtPr;rhsh;fspd; mwpKfj;Jld; vQ;rpa 9tpf;fl;Lf;fisAk; 58 Xl;lq;fSf;F ,;oe;J nkhj;jkhf 176 Xl;lq;fis khj;jpuNk ngw;wJ

,;e;jpa cgfz;lj;jpd; MLfsq;fs; Row;ge;JtPr;rhsh;fSf;F kpfTk; rhjfkhdJ vd fhyhfhykhf >Ue;JtUk; ek;gpf;ifia kPSWjpg;gLj;Jk; xU epfo;thfNt ,e;jg; Nghl;bia ehd; fhz;fpd;Nwd;

tuyhw;iwj; jpUk;gpg;ghh;g;Nghkhf ;,Ue;jhYk; ,jw;F rhd;Wfis ehk; Njbf;nfhs;sKbAk;

1996k; Mz;L ,;e;jpa cgfz;lj;jpy; eilngw;w 6tJ cyff;fpz;z Nghl;bj;njhlhpy; Nkw;fpe;jpaj;jPTfs; mzpf;nfjpuhf nkh`hyp ikjhdj;jpy; eilngw;w miuapWjpg;Nghl;bapy; mT];jpNuypa mzp ngw;w mghukhd ntw;wpapf;F mt;tzpapd; el;rj;jpu Row;ge;JtPr;rhsh; N\d; Nthh;d; kfj;jhd gq;fspg;ig toq;fpapUe;jhh;

208 vd;w ,yFthd ntw;wpapyf;if Nehf;fpj;JLg;ngLj;jhba Nkw;fpe;jpaj;jPTfs; mzp xUfl;lj;jpy; 2tpf;fl;Lf;fis >oe;J 165 ngw;W kpfTk; ];jpukhd epiyapy; ,;Ue;j Nkw;fpe;jpaj;jPTfs; mzp N\d; Nthh;dpd; ke;jpur; Roy;ge;JtPr;r nra;j khaj;jhy; vQ;rpa 8tpf;fl;Lf;fisAk; 37 Xl;lq;fSf;Fg;gwpnfhLj;J 202 Xl;lq;fSf;F RUz;L epr;rapf;fg;gl;l ntw;wpia jhiuthh;j;jJ

me;jtifapy; JLg;ghl;lj;jpw;F ngUk; rhjfkhdjhf nfhs;sg;gLk; ,;e;jpa cgfz;lj;jpd; MLfsq;fspy; cz;ikahd Mw;wy; nfhz;l Row;ge;JtPr;rhsh;fshy; rhjpf;f KbAk; vd;gij N\d; Nthh;d; epUgpj;Jf;fhz;gpj;jpUe;jhh;

,Jkl;Lkd;wp cgfz;lj;jpd; MLfsq;fs; Row;ge;JtPr;rhsh;fSf;F kpfTk; rhjfkhdnjd;gjw;F ,d;dKk; rhd;Wfs; tuyhw;wpNy fhzg;gLfpd;wd

1987k; Mz;by; ,;e;jpa cgfz;lj;jpy; eilngw;w 4tJ cyff;fpz;zj;njhlhpy; ghfp];jhdpd; mg;Jy; fhjph; cl;gl %d;W Row;ge;JtPr;rhsh;fSk; 1996k; Mz;L cyff;fpz;zg; Nghl;bapy; ;,e;jpahtpd; mdpy; Fk;Ns cl;gl ehd;F Row;ge;JtPr;rhsh;fSk; mjpftpf;fl;Lf;fisf; ifg;gw;wpa Kjy; MWtPuh;fs; gl;baypy; ,lk;ngw;wpUe;jdh; vd;gJ Rl;bf;fhl;lj;jf;fjhFk;


mdpy; Fk;Ns 6tJ cyff;fpz;zj;njhlhpy; nkhj;jkhf 15 tpf;fl;Lf;fisf;ifg;gw;wp mj; njhlhpy; mjpf tpf;fl;Lf;fisf; ifg;gw;wpa ge;JtPr;rhsuhfTk; rhjidNaLfspy; jdJ ngaiug; nghwpj;jpUe;jhh;

;,e;jj;jfty;fs; cgfz;l MLfsq;fs; rpwe;j Row;ge;JtPr;rhsh;fSf;F epr;rakhf rhjfkhf ,;Ue;Js;snjd;gij mOj;jpAiuf;fpd;wd

mT];jpNuypah-;,e;jpa mzpfSf;fpilapyhd gapw;rpg;Nghl;bg;ghh;j;j gpd;dh; ;,k;KiwAk; tuyhW jd;idg;GJg;gpj;Jf;nfhs;tjw;fhd rkpf;iQfs; njhpfpd;wd

1990w;F gpd;dh; te;jfhyg;gFjpapy;  mjPj Mw;wy;gilj;j Row;ge;JtPr;rhsh;fs; gyh; tpisahbaNghjpYk; mth;fspy; rpfuq;fshf kpsph;e;J Kk;%h;;j;jpfshf tpsq;fpa N\d; Nthh;d; mdpy; Fk;Ns Kj;ijah Kuspjud; MfpNahhpy; Kjy; ,;UtUk; Xa;Tngw;Wtpl;lepiyapy; Kj;ijah Kuspjud; jdJ filrp mj;jpahaj;jpy; jd;dplKs;s midj;J m];jpuq;fisAk; ntspf;nfhzh;e;J Kj;jpiu gjpg;ghh; vd vjph;ghh;f;fyhk;  

Kusp kl;Lkd;wpjukhd ge;JtPr;rhsh;fs; gyUk; ,;k;Kiw cyff;fpz;zj;njhlhpy; tpisahLfpd;wdh;. ,;e;j thpirapy; ;,e;jpahtpd; `h;g[d; rpq; epA]pyhe;jpd; lhdpay; ntl;Nlhhp ,;q;fpyhe;jpd; fpu`hk; ];thd; Nghd;wth;fs; jpwikfSld; rh;tNjr mstpy; ngUk; mDgtj;ijf; nfhz;bUg;gJ me;j mzpfSf;F rhjfkhdJ .

 Kd;dzp Row;ge;JtPr;rhsh;fSld; mzpfspy; gFjpNeu Row;ge;JtPr;rhsh;fs; ;,Ug;gJk; Kf;fpakhdJ vd;gij 1996 cyff;fpz;zk; czh;j;jpepw;fpd;wJ Kuspjud; jh;kNrdTld; rdj; [a#hpa mutpe;j rpy;th MfpNahh; ,;yq;ifazp ngw;w ntw;wpfspy; ve;jstpw;F gq;fspg;Gr;nra;jpUe;jdh; vd;gJ ;,urpah;fs; ed;fwpe;jtplakhFk;

me;jtifapy; JLg;ghl;lthpirfis gyg;gLj;jpf;nfhz;L tpisahLtjw;F mzpfs; Kd;tUk; gl;rj;jpy; gFjpNeu Row;ge;JtPr;rhsh;fis mjpfkhff; nfhz;l mzpfSf;F mjpfkhd rhjfq;fs; ;,Ug;gjw;F tha;g;Gs;sJ


cyff;fpz;zk; Nghd;w khngUk; Nghl;bf;fsq;fspy; Gjpa tPuh;fs; jkJ tUifiag;giwrhw;wpf;nfhs;tij fle;jfhyq;fspy; fz;Zw;Ws;sjhy; ;,k;KiwAk; $l mjpfkhf mwpag;glhj tPuh;fs; Kj;jpiugjpg;gjw;F tha;g;Gf;fs; cs;sJ

fle;jhz;L Nkw;fpe;jpaj;jPTfspy; ;,lk;ngw;w mzpf;F  ;,UgJ cyff;fpz;zg;Nghl;bfspy; fhz;gpj;j jpwikfSf;fhf nghpJk; Ngrg;gl;l mg;NghJ 17taJ ,;sk; Row;ge;JtPr;rhsh; N[hh;[; nlhf;nuy; ;,k;Kiw mah;yhe;J mzpapy; tpisahLtJ mt;tzpf;F ngUk;gykhf mikayhk; .


;,JNghd;w ;,sk; tPuh;fSf;F fskikj;Jf;nfhLf;Fk; muq;fhf cyff;fpz;zk; jpfo tha;g;Gs;sJ


 ,;Wjpahf xUtplaj;ijf; $Wtnjd;why; ,;k;Kiw cyff;fpz;zk; KuspNghd;w [hk;ghtd; Row;ge;JtPr;rhsidAk; `h;g[d; ntl;Nlhhp ];thd; Nghd;w jukhd Row;ge;JtPr;rhsh;fisAk; nlhf;nuy; Nghd;w Mw;wy; kpf;f ;,sk; Row;ge;JtPr;rhsh;fshYk; myq;fhpf;fg;gl;Ls;shy; ;,Wjptiu vjph;T$wKbahj kaph;f;$r;nrwpAk; Nghl;bfs; gytw;iw urpfh;fSf;F fhzf;fpilf;Fk; vd;gJ epr;rakhFk; .

Sunday, January 16, 2011

வேகம் வேகம் வேகம் ............. ரசிகர்களை மயிர்க்கூச்செறியவைக்கும் 100M ஓட்டம்வேகம்

மனித இனம் தோன்றிய காலம் முதல் வேகத்தின் மீதான நாட்டம் என்றென்றுமே அதிகரித்தே சென்று கொண்டிருக்கின்றது என்றால் மிகையல்ல
.
அனைத்திலும மனித மனம் வேகத்தை விரும்பியதன் பிரதிபலிப்பே இன்று உலகில் ஏற்பட்டுள்ள அனேக முன்னேற்றங்களுக்கு அடிநாதமாக விளங்குகின்றது

வேகம் என்பது விளையாட்டிற்கும் விதிவிலக்கல்ல .விளையாட்டுலகில் அனைத்துவிதமான விளையாட்டுக்களும் இன்னோரன்ன வகையில் வேகம் பெற்றுவந்தாலும் 100 மீற்றர் ஓட்டப்போட்டிகளுக்கிருக்கும் இடம் தனித்துவமானது .

இதன் காரணமாகத்தான் சாதாரண பாடசாலைப்போட்டிகள் முதற்கொண்டு சர்வதேசப் புகழ்மிக்க ஒலிம்பிக் வரையிலும் 100 மீற்றர் போட்டிகள் என்று வந்துவிட்டால் ரசிகர்கள் மத்தியில் பீறிட்டெழுகின்ற உற்சாகத்தையும் பரவச உணர்வையும் வர்ணிப்பதற்கு வார்த்தைகளே கிடையாதென்றவகையில் விளையாட்டு நிகழ்ச்சிகளில் 100 மீற்றர் ஓட்டம் என்பது தனித்துவமானதாக திகழ்கின்றது

100 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெற்றிபெறுகின்ற வீரரை அன்றேல் வீராங்கனையை உலகின் வேகமான மனிதராக கருதுகின்ற காரணத்தால் அதன் மீதான ஆர்வம் அனைத்துத்தரப்பினர் மத்தியிலும் அதிகமாக இருப்பதற்கு காரணமாகின்றது

இலத்திரனியல் முறையிலான நேரக்கணிப்பு (Electronic Timing)  1968ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதலாக இதுவரையில் 100மீற்றர் ஓட்டப்போட்டிகளில் ஆண்களுக்கான உலக சாதனை 12 தடவைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன . ஆண்களுக்கான 100மீற்றர் ஓட்டத்தில் முதன் முறையாக 10செக்கன்கள் என்ற வரம்பை முறியடித்து அதற்கு குறைவான நேரத்தில் ஓட்டத்தை நிறைவுசெய்த வீரராக அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்  ஹினஸ் திகழ்கின்றார் .

1968ம் ஆண்டு மெக்ஸிகோவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போதே அவர் இந்த உலக சாதனையை ஏற்படுத்தியிருந்தார்
தற்போது ஆண்களுக்கான 100மீற்றர் உலக சாதனை ஜமெய்க்கா வீரர் உசெயின் போல்ட் வசமுள்ளது .2009ம் ஆண்டு ஒகஸ்ற் 16ம்திகதி போல்ட் தனது முன்னைய சாதனையை 0.11 செக்கன்களால் குறைத்து 9.58 செக்கன்களில் ஓடி புதிய உலக சாதனையை நிலைநாட்டியிருந்தார்

1.   உசெய்ன் போல்ட்(ஜமெய்க்கா) -9.58 செக்கன்கள் -  16.08.2009 –பேர்லின்

2.   டைஸன் கே (அமெரிக்கா)-9.69 செக்கன்கள் -            20.09.2009- ஷங்காய்

3.   அஸாபா பவல்(ஜமெய்க்கா) -9.72 செக்கன்கள் -       02.09.2008- -லுஸான்

4.   நெஸ்டா கார்டர்(ஜமெய்ககா)-9.78 செக்கன்கள்-       29.08.2010  -ரீடி

5.   மொரிஸ் கிறீன்(அமெரிக்கா)-9.79 செக்கன்கள் -      16.06.1999 – ஏதென்ஸ்



பெண்களுக்கான 100மீற்றர் உலக சாதனை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முறியடிக்கப்படாமலேயே உள்ளது
1988ம் ஆண்டு ஜுலை 16ம்திகதி அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் இடம்பெற்ற போட்டியொன்றில்100மீற்றர் தூரத்தை 10.49 செக்கன்களில் ஓடிமுடித்து அமெரிக்க வீராங்கனை ஃபுளொரன்ஸ் கிரிபித் ஜொய்னர் நிலைநாட்டிய சாதனையே இன்னமும் பெண்கள் பிரிவில் உலக சாதனையாகவுள்ளது .

பெண்களுக்கான 100 ஓட்டத்தில்; அதி சிறந்த பெறுதிகள்

1.   ஃபுளொரன்ஸ் கிரிபித் ஜொய்னர்(அமெரிக்கா)  10.49 செக்கன்கள் 16.07.1988-  இன்டியானாபொலிஸ்

2.  கார்மலிடா ஜீற்றர் (அமெரிக்கா)   10.64 செக்கன்கள் 20.09.2009 -ஷங்காய்

3.  மேரியன் ஜோன்ஸ்( அமெரிக்கா)10.65செக்கன்கள் 12.09.1998-ஜொகனஸ்பேர்க்

4.  ஷெலி ஆன்ஃபிரேசர்(ஜமெய்க்கா) 10.73செக்கன்கள் 17.08.2009- பேர்லின்

5.  கிறிஸ்ரின் ஆரோன் (பிரான்ஸ்) 10.73 செக்கன்கள் 19.08.1998- புடாபெஸ்ற்

 100 மீற்றர் ஓட்டத்தைப் பொறுத்தவரையில் சில தருணங்கள் ரசிகர்களால் என்றென்றுமே மறக்க முடியாதவையாக மனதைவிட்டு நீங்காதவையாக நிலைத்திருப்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்

அப்படியான தருணத்திற்கு சொந்தக்காரர் தற்போதுள்ள உசெய்ன் போல்ட்டோ அன்றேல் அஸாபா பவலோ அல்ல மாறாக ஊக்கமருந்துபாவித்தமைக்காக அபகீர்த்திக்குள்ளான கனடா நாட்டைச் சேர்ந்த வீரர் பென் ஜோன்ஸன் என்றால் பார்க்காதவர்களுக்கு சந்தேகம் தோன்றலாம்

 1988ம் ஆண்டு தென்கொரியாவின் சோல் நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் ஓடிய ஓட்டம் அப்பப்பா இன்று நினைத்தாலும் பரவசத்தின் உச்சத்திற்கு ரசிகர்களைக் கொண்டுசென்றுவிடும் . பென் ஜோன்ஸனின் உருண்டுதிரண்ட கட்டுமஸ்தான உடல்வாகு மிரட்டும் விழிகள் அசூர வேகம் என்பன இன்றும் என் கண்களுக்கு முன்னால் நிழலாடுகின்றது

 ஊக்க மருந்து பாவித்தமை பெருங்குற்றம் என்பதை நானும் ஒத்துக்கொள்கின்றேன் ஆனால் எத்தனை பேர் பாவித்தும் தப்பித்துக்கொண்டார்கள் என்று எண்ணுகையில் இது தெரிந்து தான் நடந்ததா இல்லை சூழ்ச்சியால் நடந்ததா என்பது இன்னமும் புரியாமலேயே உள்ளது

 1988ல் பென் ஜோன்ஸன் ஊக்கமருந்து பாவித்ததாக கண்டுபிடித்தவர்களால் ஏன் 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் மேரியன் ஜோன்ஸ் ஊக்க மருந்து பாவித்ததை கண்டுபிடிக்க முடியவில்லை .இறுதியில் மேரியன் ஜோன்ஸே ஒப்புக்கொண்ட பின்னர் தானே அவர் பாவித்தமை தெரியவந்தது

 இப்படியாக எத்தனை வீர வீராங்கனைகள் ஒத்துக்கொள்ளாமலேயே சாதனைக்கு சொந்தங்கொண்டாடியிருப்பர் என்று நினைத்தால் விளையாட்டின் மீதான அபிமானமே இல்லாமல் போய்விடும்

   யார் செய்தாலும் தவறு தவறுதான் .பென் ஜோன்ஸனின் பெயரைக் குறிப்பிட்டது அவர் செய்தது சரியென்று சொல்லவல்ல மாறாக வேகத்தின் அடையாளமாக அபகீர்த்திக்குள்ளான நிலையிலும் என் நினைவலைகளில் வந்துசெல்கின்றமை காரணமாகவே !

உலகத்தில் ஏதேதோ காரியத்திற்காகவெல்லாம் எவ்வளவோ விலை கொடுக்கின்றனர் . ஆனால் வேகத்திற்கான தம் வாழ்வையே விலையாக கொடுக்க நேரிடுவது வீரவீராங்கனைகளைப் பொறுத்தமட்டில் மிகமிக அதிகமானது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்

Saturday, January 15, 2011

13வது திருத்ததிற்கு அப்பால் அரசியல் தீர்வு

ஆனால் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது



                              (அருண் ஆரோக்கியநாதர் )




அரசியல் தீர்வு 13வது திருத்தத்தினை விடவும் அதிகமாக 1310 ஆகவே அமையும் ஆனாலும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்

நேற்றுக்காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற இலங்கையில் பணியாற்றுகின்ற வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அரசியல் தீர்வு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ஜனாதிபதி இந்தக்கருத்துகளை வெளியிட்டார்

இங்கு அவர் மேலும் கருத்துவெளியிடுகையில் அரசியல் கட்சிகள் முன்வைக்கின்ற யோசனைகளைப் பொறுத்ததாக அனைத்துக் கட்சிகளுடனான இணங்கப்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் எனினும் இதற்கு எவ்வளவு நாள் எடுக்கும் என கூறமுடியாது மத்திய அரசாங்கத்துடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்கின்ற சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன .

ஆனால் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு எவ்வகையிலும் இடமில்லை அது நிச்சயமாக வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்த ஜனாதிபதி பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்ட நாடொன்றில் விமானத்தையே இறக்க அனுமதிக்கவில்லை என்பதை உதாரணமாக சுட்டிக்காட்டினார். பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது என்பதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடமே தெரிவித்தாகவும் அவர்கள் யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக ஏற்றுக்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார் .

முழுமையான விசாரணைக்கு உத்தரவு

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு இலங்கை கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்திய ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி இலங்கை கடற்படையினரின் தரவுகளுக்கு அமைவாக அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறவில்லை எனத் தெரிகின்றபோதிலும் மேலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்தார்.     ' முன்னர் எமக்கிடையில் சில ஏற்பாடுகள் இருந்தன எனினும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அமைதிச் சூழலின் அடிப்படையில் இது மாற்றியமைக்கப்படவேண்டும்' என ஜனாதிபதி கூறினார்
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி 'மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் வடபகுதியில் மீன்பிடிநடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை மீனவர்கள் தடுக்கப்பட்டிருந்தனர் .தற்போது அவர்களால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடக்கூடியதாகவுள்ளது அந்தவகையில் இரு நாடுகளின் மீனவர்களுக்கிடையில் புரிந்துணர்வீன்மையும் மோதல்களும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவததாகவும் சுட்டிக்காட்டினாhர்

இவ்வாறான விவகாரங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தமக்கிடையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டியமை முக்கியமானதென தெரிவித்த ஜனாதிபதி இது இருநாடுகளும் கடந்த ஜுன் மாதத்தில் வெளியிட்ட கூட்டறிக்கைக்கு இசைவானதெனவும் சுட்டிக்காட்டினார்

இந்தியாவிற்கான இலங்கைத்தூதுவர் பிரசாத் காரியவசம் இந்திய அரசாங்கத்தால் விளங்கங்கோரலுக்காக அழைக்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ' இந்திய அரசாங்கம் உட்பட எந்தவொரு அரசாங்கத்திற்கும் அவ்வாறான உரிமை காணப்படுகின்றது.இதுபோன்ற சூழ்நிலைகளில் இலங்கை அரசாங்கமும் இதுபோன்ற நடவடிக்கைகளையே மேற்கொள்ளும் இது தொடர்பில் எமக்கு எந்தவிதப்பிரச்சனையும் கிடையாது' எனத் தெரிவித்தார்.

                வேண்டுகோள் இன்றியே இந்தியா உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறும் இதனை அத்தியாவசியச் சேவையாக கருதி செயற்படுமாறும் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார் .

மோசமான காலநிலை காரணமாகவே மட்டக்களப்பிற்கான தனது விஜயம் இரத்துச்செய்யப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி ஆனாலும் அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக தொடர்ச்சியாக அவதானம் செலுத்திவருவதாக குறிப்பிட்டார் .இந்தியாவின் வெள்ள நிவாரண உதவிகளுக்கு பாராட்டுத்தெரிவித்த ஜனாதிபதி இலங்கை வேண்டுகோள் விடுக்காத நிலையிலேயே இந்தியா இலங்கைக்கு உதவ முன்வந்ததாக தெரிவித்தார்

     மேற்குலகுடனான உறவுகள் வலுவாகவுள்ளது

மேற்குலகுடனான உறவு தொடர்ந்துமே வலுவாக இருந்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததுடன் சில நாடுகளில் இலங்கை தொடர்பான சாதாகமான போக்குகள் முன்னேற்றம் கண்டுவருவதாக குறிப்பிட்டார் .

குடிவரவு தொடர்பான கனடாவின் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் சுவிற்சர்லாந்து ஜேர்மனி போன்ற நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையை ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி புலம்பெயர்ந்த மக்களுடனான உறவை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் ஏற்கனவே புலம்பெயர்ந்த மக்களில் சிலர் இங்கு அழைத்துவரப்பட்டு உண்மை நிலைமை அவர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார் .

இருந்தபோதிலும் சில தரப்பினர் எதிர்காலத்திலும் குழப்பங்களை ஏற்படுத்த முனையக்கூடும் அத்தகையவர்கள் வேறு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்

இதன்போது ஊடவியலாளர் ஒருவர் இவ்வாண்டில் எந்தெந்த நாடுகளுக்கு நீங்கள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டீர்கள் என வினவினார் இதற்கு பதிலளித்த ஜனாதிபதி முன்கூட்டியே இதனைக் கூறமுடியாது அப்படிக் கூறினால் பதாதைகளுடன் வந்துநின்றுவிடுவார்கள் அப்படியாக இன்னுமொரு சம்பவம் இடம்பெறுவதை விரும்பவில்லை என நகைச்சுவையுணர்வுடன் கூறினார்

வேறெந்த நாடும் இவ்வளவு வெற்றியைக் கண்டதில்லை

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்த ஜனாதிபதி 5000ற்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்

.தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இங்கு மேலும் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி '30வருடகாலமாக பயங்கரவாத்திற்கெதிரான யுத்தத்தின் பின்னர் 6 மாதமளவிலான குறுகிய காலப்பகுதியில் அவர்களை விடுவிக்க முடிந்துள்ளது இது இலகுவான காரியம் கிடையாது வேறெந்த நாட்டாலும் இவ்வாறான வெற்றியை ஈட்ட முடிந்ததில்லை'எனத் தெரிவித்தார் . சான்றுகளின் அடிப்படையில் தடுப்பிலுள்ளவர்களுக்கு எதிராக வழங்குகள் தொடரப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்

Friday, January 7, 2011

மங்கிவரும் மகளிர் டென்னிஸ்


உலகிலுள்ள பல்வேறு விளையாட்டுக்களின் ரசிகர்களுக்கும் மகளிர் டென்னிஸ் மீது ஒரு அலாதிப்பிரியம் உண்டு.

இதற்கு ஸ்டெபி கிராப் -கப்ரியேல்லா சபாடினி- கிறிஸ் எவர்ட் - மார்ட்டினா நவரெட்டிலோவா –ஜெனிபர் கப்ரியாட்டி – மொனிகா செலஸ் போன்ற வீராங்கனைகள் மகத்தான டென்னிஸ் ஆற்றலுடன் அழகியலையும் இணைத்து விளையாடியமையே காரணமாக அமைந்தது.

ஆனால் நிகழ்காலப்பகுதியிலோ மகளிர் டென்னிஸ் மீதான ரசிகர்களின் ஆர்வம் படிப்படியாக குறைந்துகொண்டே செல்கின்றது என்பது உணரப்பட்டுள்ள உண்மையாகும் .

தற்போதைய காலத்திலும் அழகுமிக்க வீராங்கனைகள் கவர்ச்சியாக விளையாடுவதை அவதானிக்க முடிந்தாலும் 1980ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்ட வீராங்கனைகள் வெளிப்படுத்திய ஆற்றல்களை தற்போதுள்ளவர்கள் வெளிப்படுத்துவதில்லை என்பதை சாதாரண ரசிகர்களால் கூட புரிந்துகொள்ளமுடியும் .1980களிலுள்ள வீராங்கனைகளை ஒப்பிடக்காரணம் அந்த வீராங்கனைகளையே அறிவுபெற்ற காலப்பகுதியில் சிறுவயதில் காணக்கிடைத்தது

அவர்களுக்கு முன்னர் விளையாடிய பெரும் வீராங்கனைகளான பிலி ஜீன் கிங் - மாங்கிரட் கோர்ட் போன்ற வீராங்கனைகளின் ஆற்றல்களை தொலைக்காட்சிகளுடாக கூட காணக்கிடைக்கவில்லை என்பதால் தால் அவர்களை இங்கே ஒப்பிடவில்லை

தற்போது விளையாடிவரும் வில்லியம்ஸ் சகோதரிகள் அவ்வப்போது சம்பியன் பட்டங்களைக் கைப்பற்றுவது உண்மைதான் .அவர்கள் கவர்ச்சியைக் கிளறும் ஆடைகளை அணிந்து ரசிகர்களை கவர முற்படுவதையும் உணர்ந்துகொள்ளமுடிகின்றது .ஆனால் எனது பார்வையின் வில்லியம்ஸ் சகோதரிகள் பட்டங்கள் பலவற்றை கைப்பற்றியிருந்தாலும் அவர்கள் தமது உடற்பலத்தினை வைத்துக்கொண்டு ''Power Tennis" விளையாடுகின்றனரேயன்றி நுட்பத்திறனுடன் விளையாடிய ஸ்டெபி கிராப் போன்றவர்களின் ஆற்றல்வெளிப்பாடுகளை அவர்களிடத்தில் காணமுடியவில்லை

மரியா ஷரபோவா ஜஸ்ரின் ஹெனின் கிம் கிளைஸ்டர்ஸ் போன்ற வீராங்கனைகள் தற்போதும் விளையாடினாலும் அவர்களிடத்தில் ஆற்றலின் உச்சத்தில் தொடர்ச்சியாக நிலைத்து நின்று அடுத்தடுத்து சம்பியன் பட்டங்களை வெல்லும் திறன் காணப்படவில்லை.

 முதற்தர டென்னிஸ் போட்டிகளில் எத்ததைய சம்பியன் பட்டங்களையும் வெற்றிகொள்ளாமலேயே பலகோடிருபாவை சம்பாதித்த ரஷ்ய வீராங்கனை அனா கோர்னிகோவா போலன்றி மரியா ஷரபோவா தனது டென்னிஸ் வாழ்வில் மூன்று கிராண்ட்லாம் பட்டங்கள் உட்பட பல பட்டங்களை வென்றிருந்தாலும் தற்போது அவரது கவனமும் ஃபெஷன் மொடலிங் எனக்குவிந்துள்ளதால் தற்போது டென்னிஸ் ஆற்றல் வெளிப்பாடுகள் குறைந்துவிட்டன

ரொஜர் பெடரர் ரவேல் நடால் போன்ற வீரர்களின் அபரீதமான ஆற்றல்வெளிப்பாடுகளால் பீற் சாம்பிரஸ் அன்ட்றே அகாஸி; போன்ற ஜாம்பவான்களின் வெளியேற்றத்திற்கு பின்னரும் ஆடவர் டென்னிஸ் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரிக்கின்றபோதும் மகளிர் டென்னிஸ் மீதான ஆர்வம் மங்கிவருவதற்கு டென்னிஸ் ஆட்டத்தில் அன்றி வேறு துறைகளில் அவதானம் சிதறுவதே காரணமாகும்

Wednesday, January 5, 2011

அழிவை நோக்கிச் செல்லும் உலகில் நமது வகிபாகமென்ன?

இன்று உலக சுற்றாடல் தினம்



விடைபெற்ற 2010ம் ஆண்டு என்றுமில்லாத வகையில் உலகம் காட்டுமிராட்டித்தனம் நிறைந்ததாக போய்விட்டதற்கு சான்றுபகர்கின்றதென்றால் மனிதராகிய எம்மத்தியில் சந்தேகம் தோன்றுவதற்கு பதிலாக சங்கடம் தோன்றுவதற்குத்தான் இடமுண்டு

ஏனென்றால் ஐந்தறிவு மிருகங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திய முக்கிய காரணிகளிலொன்றான மனிதாபிமானம் தொலைந்து மனிதர்கள் மனிதத்தன்மையை வேகமாக இல்லாதொழித்துக்கொண்டிருப்பது ஒருபுறம் நடக்க இயற்கையும் தன் கோரமுகத்தைக் காண்பித்து ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருப்பதே இதற்கு காரணமாகும்.

 இயற்கையின் சீற்றத்திற்கும் மனிதர்களின் நடவடிக்கைகளே மூலகாரணமாக இருப்பது நிருபணமாகியிருப்பதே சங்கடத்திற்கு வழிகோலுகின்றது

இன்றைய நிலையில் நாடுகள் தமது பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்வதற்காக மனிதர்களைக் காவுகொடுக்கவே தயங்காத நிலையில் இயற்கையின் கதியை எண்ணினால் கவலைகொள்வதைத்தவிர வேறுவழியில்லை

ஆனால் இயற்கையை மனிதன் தன்செயற்பாடுகளால் அழிக்க முனையும் போது மனிதர்களது வேகத்திற்கு மேலாக பன்மடங்கு அசூரத்தனமாக இயற்கை பதிலடி கொடுத்துவருவதற்கு ஆதாரம் தேடுவதற்கு வரலாற்றில் நாம் பலவருடகாலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை

எம்மிடமிருந்து அண்மையில் விடைபெற்ற 2010ம் ஆண்டிலேயே இதற்கான பதிலைத் தேடிவிடமுடியும்

பூமி அதிர்ச்சிகள்- வெப்ப கதிர்வீச்சுக்கள் -வெள்ள அனர்த்தங்கள் -எரிமலை சீற்றங்கள்- அசூர சுறாவளிகள் -கடும்பனிப்புயல் -நிலச்சரிவுகள் -வரட்சிகள் என இயற்கையின் கோரத்தாண்டவத்தில் 2010ம் ஆண்டில் ஆகக்குறைந்தது 5லட்சம் மக்கள் கொல்லப்பட்டதான உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகள் வெளியாகியுள்ளன.


கடந்த ஒருதசாப்ததிற்கு மேலான காலப்பகுதியில் கடந்தாண்டே மிகவும் பயங்கரமான ஆண்டாக அமைந்ததுடன் கடந்த 40வருடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த தொகையிலும் பார்க்க அதிமான மக்கள் 2010ம் ஆண்டிலே இயற்கை அனர்த்தத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது

இயற்கை அனர்த்தங்கள் எதிர்பாராத வகையில் நிகழும் போதிலும் அதனால் ஏற்படும் மோசமான அழிவுகளுக்கு அனேக சந்தர்ப்பங்களில் மனிதர்களையே குறைகூறவேண்டும் என விஞ்ஞானிகளும் அனர்த்த நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்

இதற்கு உதாரணமாக ஹெய்டி மற்றும் சிலி ஆகிய நாடுகளில் கடந்தாண்டு இடம்பெற்ற பூகம்பங்கள் ஒப்புநோக்கப்படுகின்றன

ஹெய்டியில் கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற பூகம்பத்தில் இரண்டு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமமானவர்கள் கொல்லப்பட்டனர் .ஆனால் அதைவிடவும் அளவில் 500 மடங்கிற்கும் அதிகமான பெரிய பூகம்பம் சிலியில் இடம்பெற்றபோது அதில் 1000ற்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டிருந்தனர் .

ஹெய்டியில் திட்டமிடப்படாத வகையில் அமைந்திருந்த அடர்த்திமிக்க மக்கள் குடியிருப்புக்களும் மிகவும் மோசமான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டிடங்களும் குடியிருப்புகளுமே ஹெய்டியின் பயங்கர அழிவுகளுக்கு வித்திட்டதாக சுட்டிக்காட்டப்படும் அதேவேளையில் சிலியில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக காணப்பட்டமையும் பாதுகாப்பான முறையில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களுமே மிகக்குறைவான இழப்புக்களுக்கு காரணமென விஞ்ஞானிகளும் அனர்த்த நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர்.

பொருளாதார வளர்ச்சி என்பதையே மையமாகக்கொண்ட மனிதர்களின் கட்டற்ற வேட்கையின் விளைவால் உருவான பூகோள வெப்பமயமாதல் காரணமாக பூமியின் காலநிலை வழமையிலும் பார்க்க முரணானதாக மாறிக்கொண்டிருப்பதாக பூகோள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் இதனால் கடுமையான காலநிலை மாற்றங்கள் கடந்தாண்டில் பதிவுசெய்யப்பட்டன. இதில் வெப்பக்கதிர்வீச்சு மற்றும் வெள்ளப்பெருக்கு என்பவை குறிப்பிடத்தக்கது


கடந்தாண்டு கோடைகாலத்தில் ரஷ்யாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பக்கதிர்வீச்சில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் .ரஷ்யாவில் ஏற்பட்ட வெப்பக்கதிர்வீச்சு 111 டிக்கிரி வெப்பம் கொண்டதெனவும் இது ரஷ்யாவின் வரலாற்றில் மிகமோசமானதென்பதுடன் நூறாயிரம் ஆண்டுகளுக்கு ஒருதடவையே இவ்வாறான அசாதாரணமான வெப்பக்கதிர்வீச்சு நிகழ்வதாக வரலாற்றுச்சான்றுகள் குறிப்பிடுகின்றன ஆனால் பூகோள வெப்பமயமாதல் காரணமாக இப்படியான நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெறும் நிகழ்வுகளாக மாறியிருப்பது கவலைக்கிடமானது .

இது மட்டுமன்றி 18 நாடுகளில் கடந்தாண்டிலேயே அந்நாடுகளின் வரலாற்றில் வெப்பமான நாட்கள் பதிவாகியிருக்கின்றன. கடந்தாண்டில் ஏற்பட்ட தனியொரு வெப்பக்கதிர்வீச்சுபுயல்காரணமாக 17000 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர் .

இந்த எண்ணிக்கையானவர் கடந்த 15 ஆண்டுகாலத்தில் உலகில் நிகழ்ந்த ஒட்டுமொத்த விமானவிபத்துக்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிடவும் அதிகமென சுட்டிக்காட்டப்படுகின்றது. கடந்தாண்டு ஒரு பக்கம் வெப்பக்கதிர்வீச்சென்றால் மறுபக்கம் பாகிஸ்தானில் இடம்பெற்ற வரலாறுகாணாத வெள்ளப்பெருக்கில் 62000 சதுர மைல்கள் பிரதேசம் மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதவாறு வெள்ளத்தால் துண்டாடப்பட்டன .இலஙகையின பரப்பளவைவிடவும் இரண்டுமடங்கிற்கு அதிகமான பிரதேசம் பாகிஸ்தானில் வெள்ளத்தால் துண்டாப்பட்டதென்றால் வெள்ளத்தின்
பரிமாணத்தை விளங்கிக்கொள்ளமுடியும் .


மனிதர்கள் ஏற்படுத்தும் அழிவுகளால் இயற்கை சீற்றமெடுத்த மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் எமது நாட்டிற்கு வெளியில் இடம்பெற்றவை என்பதால் அவற்றின் தாக்கங்களை விளங்கிக்கொள்ளமுடியாதவர்கள் கடந்தாண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி இரவுமுதல் அதிகாலை வரையில் கொழும்பில் பெய்த கடும் மழைவீழ்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் எண்ணிப்பார்த்தால் காத்திருக்கும் அபாயத்தின் பயங்கரம் புரிந்துவிடும்


ஒருநாள் பெய்த மழையிலேயே பாராளுமன்றம் உட்பட தலைநகரின் பலபகுதிகள் மூழ்கிவிட்டதென்றால் பாகிஸ்தானில் போன்று தொடர்ச்சியாக வாரக்கணக்கில் மழைபெய்தால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது புலனாகிவிடும்



தனிமனிதர்களாகிய நாம் பொலித்தின் பாவனையை குறைத்தல் .வீடுகளிலும் நாம் வாழும் சூழலிலுமுள்ள கழிவுநீர் வழிந்தோடும் பகுதிகளை நேர்த்தியாக வைத்திருந்தல் போன்ற சிறிய செயற்பாடுகளுடாகவே சுற்றாடலை சிறப்பாக வைத்திருப்பதற்கு பங்களிக்கமுடியும் .

உலக சுற்றாடல் தினமாகிய இன்றைய நாளில் நாம் வாழும் இந்த உலகம் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக வேகமாக அழிவுப்பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதனை உணர்ந்து அதனைத் தவிர்க்க முடியாவிட்டாலும் தாமதிப்பதற்கு எம்மால் செய்யக்கூடிய சிறிய செயற்பாடுகளையேனும் செய்தாக வேண்டும் என்பதை சிந்தனையில் நிறுத்தி செயற்படவேண்டும்